Posts

Showing posts from February, 2022

நானென்ன செய்தேனடா?

Image
ப க்தி காணங்களின் சிறப்பே இறைவனிடம் இறைஞ்சும்போதோ அல்லது அவனிடம் தன் உள்ளக்கிடக்கைகளைக் கொட்டும்போதோ வார்த்தைகள் மிகுந்த தோழ பாவத்துடன் வெளிப்படும். அவ்வகையில், கீழ்க்காணும் இப்பாடலில் புரந்தரதாசர், ஏழுமலையானை "நான் என்ன பாவம் செய்தேனடா ரங்கைய்யா? நீதான் என்னை உடனிருந்து காக்கவேண்டும்" என்று தொடங்கி, தொடர்ந்து அவனை ஒருமையில் சுட்டி விளித்து, தன் கீர்தனையிலூடாக உரையாட முற்படுகிறார்.  இக் கீர்த்தனையைப் பாடிய நரசிம்ம நாயக் அவர்கள் தொடக்கம் முதல் இறுதிவரை தன் குரலினிமையால் கட்டிப்போடுகிறார். மேலும் கேட்டுக்கொண்டே இருப்பதற்கு ஏங்கும் வண்ணம் உள்ள இப்பாடலில், அதி அற்புதமாகச் சில இடங்களில் தன் ஆலாபனை மூலம் புரந்தரதாஸருக்கு வந்தனைகள் செய்கிறார். நல்ல ஒலிப் பெருக்கியிலோ அல்லது ஹெட்செட்டுகளோ அணிந்து கேட்க வேண்டிய கீர்த்தனை. பக்தி காணங்களுக்கே உரித்தான இசைக்கருவிகளும் தாளங்களும் கண்டிப்பாகக் கேட்பவருக்கு உவப்பளிக்கும். வீட்டிலிருக்கும் துணை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடனும் சேர்ந்து கேட்கலாம். மொழி புரியவேண்டிய அவசியமே இன்றி என்ன நடக்கும் தெரியுமா? கண்கள் பனிக்கும்! அதற்கு நான் உத்தரவ

Cookery Mockery

அ ந்தத் தலைப்பை அப்படியே தமிழில் எழுதினால் "குக்கெரி மாக்கெரி" என்று எழுதவேண்டும். படிப்பதற்கே ஒரு மார்க்கமாக இருப்பதால் அப்படி எழுதாமல் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். இந்தக்காலத்தில் எந்நேரமும் அடுப்படியில் நின்று ஆக்கி, இறக்கி, சோறு போட்டு, சோறு தின்று, சட்டி கழுவிச் சலிக்கும் பெண்களைத் தவிர, மற்ற வேலைகளிலோ தொழில்களிலோ ஈடுபடும் பெண்களாகட்டும் அல்லது ஆண்களாகட்டும், ஒரு மாறுதலுக்காகச் செய்து பார்க்க விரும்பும் ஒன்றுதான் சமையல் என்பது. எழுத்தில் உள்ள சமையற் குறிப்புகள் இனி தேவையில்லை, எது வேண்டுமானாலும் யூ ட்யூபில் வந்து கொட்டுகிறது. ஆனால் பிரச்சனையும் அங்குதான் தொடங்குகிறது.  ஒரு காலத்தில் ஆங்காங்கே மின்மினிப்பூச்சிகள் மாதிரித் தோன்றி மறைந்த சிட்டுக்குருவி வைத்தியர்கள் கொரோனா அலையில் பல்கிப் பெருகி புற்றீசல் மாதிரி வந்துகொண்டேயிருந்தார்கள். வரமிளகாயை ஊறப்போட்டு அரைத்து அதை எடுத்து மூக்கிலும் நெற்றியிலும் பற்றுப்போட்டால் கொரோனா மட்டுப்படும். 90% நுரையீரல் பழுதடைந்த கொரோனா பேஷண்ட்டை எழுப்பி அவர் மூக்கில் காய்ச்சிய கழுதைப்பாலில் சித்தரத்தையைப் பொடித்துப் போட்டு பழுக்கக் கா

பழகுவதில் நீலமும் இளஞ்சிவப்பும்

Image
சி றுவயதிலிருந்து  நான் எதிர்கொண்ட மற்றும் இன்னமும் எதிர்கொண்டுவரும் மிக முக்கியப்பிரச்சனை ஒன்று. இதைப் பற்றியெல்லாம் யாரும் பேசுவதே இல்லை.  எந்நேரமும் பெண்ணியமும் நொன்னியமும்தான் புடுங்கிக் கொண்டிருக்க வேண்டுமா? மணமாவதற்கு முன் என் தாய், தமக்கை. இப்போது இவள்.  என்ன பிரச்சனை?  நெட்டி நெட்டித் தள்ளுவது. போ போய்ப் பேசு, போய்ப் பழகு. சரி பழகலாம் என்று போனால், நாமே இந்த விஷயத்தில் ஒரு தத்தி, இம்மாதிரி சமயங்களில் நமக்கு எதிரில் வருபவன் அதை விடப் பெரிய தத்தியாக வந்து அமைந்து தொலைக்கிரான்கள்.  முதலில் நான்-   'ஹலோ எப்டி இருக்கீங்க?' 'இருக்கேன்'  'எங்கே இந்தப்பக்கம்?' 'சும்மா அப்டியே'  'நாளைக்கி லீவுங்களா?' 'இல்லிங்க எங்கத்த? பசங்க ரொம்ப நாளா  தொல்ல, அதான் சும்மா அழைச்சிட்டு போலாம்னு...நமக்கு அதுக்கெல்லாம் எங்க நேரம்?' 'ஆமா கரெக்டு. சாப்டாச்சுங்களா?' 'ம்ம் ஆச்சு. என்னத்த இந்த வயசுல? வீட்டுக்கு வாங்க ஒருநாள் கண்டிப்பா' 'வந்தர்றோம்' 'அவங்க பேசி முடிச்சுட்டாங்களா? போலங்களா?'  'தெரிலீங்க. ஆமா முடிச்சுட்டாங்கனு நெனை

சாத்தானின் வழக்கறிஞர்

இ ந்த Devil's  Advocate இருக்கிறதே? அதுவே ஒரு சாத்தான்தான்.   சாத்தானைப் போய் யாராவது முத்தமிடுவார்களா?  ஆனால் அதுதான் அனுதினமும் என்னை reality check இல் வைக்கிறது.  Euphoria விலிருந்து வெளியே இழுக்கிறது சாத்தான்.  இந்தச் சாத்தான் மொழி அறியாது.  மொழி அறியாச் சாத்தான் இது.  சாத்தானுக்கு மொழி தேவையா? இல்லாமலிருக்கலாம்.   ஆனால் மொழிக்குச் சாத்தான் தேவை. முதலில் உரைநடையில் கிறுக்கிவிட்டுப் பார்த்தால் கேவலமாக இருந்தது. பிறகு indentation மாற்றிய பிறகு பார்த்தால் கவிதை மாதிரியே இருந்ததா, அப்படியே விட்டுவிட்டேன். அடப்பாவிகளா இந்த டெக்னிக்க வச்சித்தான் இவ்ளோ நாளா கவித எய்தினு இருந்தீங்களா? இத மட்டும் நான் முழுசா டீகோட் பண்ணுனேன், மவன செத்தீங்கடா. 

அய்யன் ஸீரீஸ் (கதை 5) : உலகின் முதல் தொ.நு. பு

ஏன் அறிவியல் புனைவுதான் இருக்கவேண்டுமா?  சட்டமா?  தொழில் நுட்பப் புனைவு இருந்தால்  யாருக்கு  எங்கு குடைகிறது?  சரி  கதைக்குள் போவோமா?  தோ ல்வி கிலியில் புரண்டு படுத்த அய்யனுக்கு உறக்கம் மறந்தது. மனமொப்பாமல் தயக்கத்துடன் கரஸ். எம்ஸீயேவை Unblock செய்து,  'தம்பி, நான் சும்மா டெஸ்ட் பண்ணேன் என் பரீட்சைல நீங்க தேறீட்டீங்க. உங்க ஆசைப்படியே ஃப்ரீயா ஏதாச்சும் பண்ணிக் குடுங்க தம்பி' என்று மெசேஜ் போட்டான்.  அவன் அதற்கு -  'அண்ணே ஒங்க நல்ல மனசப் புரிஞ்சுக்காம நான்தான் என்னை நானே தற்-ப்லாக் பண்ணிக்கிட்டேன். அதுக்கு நீங்கதான் என்னய மன்னிக்கனும்ணே' என்று பதில் மெசேஜ் போட்டான்.   அவன் வந்ததும் "வேரியபிள் ப்ளஷர் ஆஃப் டெக்ஸ்ட்" (Variable Pleasure Of Text) ஃபியூச்சர அப்பறமா பில்ட் பண்ணலாம் மொதல்ல "அய்யன் டோக்கன்ஸ்" இம்ப்ளிமென்ட் பண்ணீருங்க  ப்ளீஸ் என்றான்.  அதற்கு அவன் -  'அண்ணே ஷிபா இனுவெல்லாம் (Shiba Inu) நாய் பேருல வந்திருக்குன்னே நாமளும் நம்ப ஸ்நோயீ செல்லம் பேருல யுடிலிட்டி டோக்கன் ரிலீஸ் பண்ணலாம்ணே' என்று ஐடியா கொடுத்தான்.  'தம்பி சொல்றத செய்யிப்பா,

இரு பாடல்கள்

Image
இ வ்விரண்டு பாடல்களையும் அப்படியே பகிர்வதை விட, சில வரிகள் எழுதுவது உவப்பு என்று பட்டது. இரண்டும் பண்டரிபுர விட்டலைப் பற்றியது. ஒன்று கன்னடம் மற்றொன்று மராத்தி.   முதற்பாடல் -  ஞானக் குழந்தை என்றால் நமக்கெல்லாம் யார் நினைவுக்கு வருவார்? எனக்கு நினைவுக்கு வருபவர் ரகுராம் மணிகண்டன். வளர்ந்து இளைஞர் ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன். இந்தப் பாடலைக் கேட்கும்போது  கண்கள் கண்டிப்பாகப் பனிக்கும். புரந்தர தாசர் இயற்றிய இப்பாடல் சென்ற வருடத்தின் இறுதியில் தொடச்சியாகப் பல முறைகள் கேட்டு ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒரு துளி கண்ணீராவது உகுத்திருப்பேன் என்று நினைக்கிறேன், காரணமே தெரியாமல்!  மொழிப் பரீச்சயமில்லாதோருக்கும் இது நடக்குமென்பது உறுதி. https://www.youtube.com/watch?v=uCCaFqRoihQ கன்னட மொழி கிட்டத்தட்ட தமிழ் போன்றே இருக்கும் சகோதர மொழி. மற்ற தென்னிந்திய மொழிகளில் உள்ளது போலவே சமஸ்க்ருத பாதிப்பு உண்டு. இக்காரணத்தினால் தமிழில் இல்லாத சில கடின உச்சரிப்புகள் கொண்ட இப்பாடலை வெகு ஸ்ரத்தையாகவும் அற்புதமாகவும் பாடியிருப்பார்  சிறுவர் மணிகண்டன். சப் டைட்டிலில் ஒவ்வொரு வரிக்கும் மொழி பெயர்ப்பு உண்டு எ

சல்லியன்ஸ்

நே ற்று இரவு ஒருவன் போன் செய்தான். அவன் இதைப் படிப்பதற்கு 0.0000000000001% கூட வாய்ப்பில்லை.  குறைந்தது ஒரு செய்தித்தாள் வாசிக்கும் ஒருவன்கூட இம்மாதிரி ஈனத்தனமாக நடந்துகொள்ளமாட்டான்.  தாள முடியாமல் நான் இதை நான் இங்கு எழுதுகிறேன். மறு அறிமுகமானதே பல வருடங்கள் கழித்து வாட்ஸப் புண்ணியத்தில். பிறகும் ஒரு வருடம் ஒரு தொடர்பு இல்லை ஒன்றும் இல்லை. திடீரென்று மெசேஜ் போட்டு கால் செய்யச் சொன்னான். செய்தால், அவன்- உன் தம்பி என்ன பண்றான்? சொன்னேன் - பேங்கில் இருக்கிறான். என்ன போஸ்டிங்க்? கோபத்தை அடக்கிக்கொண்டு நான் அது பற்றி கேட்பதில்லை. அப்போ பேச்சு வார்த்தை இல்லையா? (நீங்கதான்டா பங்காளிச்சண்டை கூதி சண்டைன்னு ஒருத்தனுக் கொருத்தன் கழுத்தையும் பொச்சையும் அறுத்துக்குவீங்க புருஷன் பொண்டாட்டிக்கும் பொண்டாட்டி புருஷனுக்கும் வெஷம் வெச்சுக்குவீங்க... தூ... என்று மனதில் நினைத்துக்கொண்டு) இருக்குது ஆனா அதெல்லாம் தம்பியா இருந்தாலும் அதையெல்லாம் கேக்கறது கிடையாது. அவன் எந்தப்பதவியில் இருந்தாலும் இல்லாட்டினாலும் எனக்குத் தம்பிதான் அதை வைத்து அவனை மதிப்பிடுவதாக இல்லை. பழைய நண்பர்களுக்கும் அதுதான் பதவியை வைத்தோ