இ து நடந்து சரியாக ஒன்றரை வருடங்கள் இருக்கும் . கொரோனாவெல்லாம் சரியாக முற்றுப்பெற்று ஒர்க் ஃப்ரம் ஹோமான்கள் ஜட்டியுடன் அல்லது அதுவும் இல்லாமல் , அதாவது பைஜாமாஸிலோ , லுங்கியுடனோ , கட்டைக் கழிசானுடனோ மேலே மட்டும் சட்டையோ , தேநீர்ச்சட்டையோ அணிந்துகொண்டு டீம்ஸ் காலில் பங்கேற்றுக்கொண்டிருந்த காலம் . நான் மட்டும் தினமும் பணியிடம் சென்று வந்துகொண்டிருந்தேன் . நானெல்லாம் கொரோனா வந்த புதிதில் அதாவது இருபதாம் வருடம் மார்ச் இருபத்து மூன்றாம் தேதியிலிருந்து ஏப்ரல் பதினைந்தோ பதினெழோ வரைதான் வீட்டிலிருந்து வேலை . அதற்குப்பிறகு தினமும் அலுவலகம்தான் அவ்வப்போது மட்டும் வீட்டிலிருந்து வேலை / குறைந்தது பத்து மணி நேரம் வேலை , பிறகு வீட்டுக்கு வந்து வெறிபிடித்த மாதிரி எழுதிக்கொண்டிருந்தேன் . அது ஒரு முதல் நாவல் முயற்சி , மொத்தம் முந்நூற்று முப்பத்தைந்து பக்கங்கள் வந்துவிட்டன . தினமும் எழுதுவதை தனித்தனி கோப்புக்களாகச் சேமித்து வைத்திருந்தேன் . அடுத்த நாள் அதை ஒரு பிரதியெடுத்து கொஞ்சம் திருத்திவிட்டு , பழைய பிரதியை அழித்துவிடுவ
L et me lay it out straight before you get duped by the title and jump into reading with high hopes. This isn't your typical movie review. Every time I scribble about a flick, the way I've been doing in Tamil, it ain't your fancy-pants review; it's more about spilling the beans on what it's like sitting through them. It's about asking yourself, 'Was it a total pain in the ass?' or that elation when you finally drain the main vein at the nearest pee point after pounding a few mugs of draught beer right before a non-stop haul from NJ to SJ in a stormy night. I will get to that later; that's the high point of this post, which I am saving for the end. Besides boredom, it takes valor, courage, and an immense sense of sacrifice to throw the money at this half-brewed moonshine cocktail and waste time in haste out of compulsion. Compulsion because it wasn't a single anal canal that was 'force sat' on movie hall recliners to go through this Guant
இ து நடுகல் இதழ் 15 பற்றிய மதிப்புரையோ விமர்சனமோ அல்ல . அதை வாசித்த வாசகனின் வெகு சுருக்கமான வாசிப்பனுபவம் அவ்வளவே . இதழ் 15 என் கைகளுக்குக் கிட்டியும் வாசிக்காமல் நீண்டநாட்கள் ஆறப்போடப்பட்டுவிட்டது . இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது . தலையங்கத்திலிருந்து வாசிக்கத்தொடங்கி , பிழை திருத்தும் வேலை ஆசிரியர் வா . மு . கோமுவின் தலையில் வந்து விடிவது , இன்பாக்ஸ்களில் துண்டு துக்கடா கவிதைக் குதறல்கள் போன்றவற்றை வாசிக்க நேர்ந்தபோது , இந்த மனிதரின் இதழ் வெளியீட்டில் உள்ள ஈடுபாடு கண்டு பிரமித்தேன் . தலையங்கத்துக்கு அடுத்து வந்த அனைத்துமே சரசரவென்று கடந்து போயின . எழுத்துப்பிழைகள் , குறை கவிதைகள் பற்றிய அங்கலாய்ப்பு ஏற்படுத்திய சுவாரசியம் தவிர வேறு எதுவும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை . வாஸ்தோவின் நீண்ட தலைப்பிட்ட கதை ஒன்று முதல்வனே , வனே என்ற பழைய கம்பியூட்டர் கிராபிக்ஸ் பாடல் ஒன்றை நினைவுபடுத்தியது . நல்ல ஒரு சிற்றிலக்கிய இதழுக்கு உகந்த தலைப்புதான் . ஆனால் தலைப்பே எழுத்துப்பிழையுடன் ' தொப்பூள் ' என்று தொட
Comments
Post a Comment