Posts

Showing posts from July, 2022

ஒரு பென் ட்டு பப்ளிஷ் ஃபிக்ஷன்

இ ந்த அமேஸான் கிண்டில் என்று ஒன்று இருக்கிறதல்லவா ? அதில் pentopublish என்கிற வருடாந்திர எழுத்துப்போட்டி இருக்கிறது . அதன் ஐந்தாம் வெர்ஷனில் கலந்துகொள்ளச்சொல்லி ஸ்வாமிநாதன் அதன் இணைப்பை அனுப்பினான் . அவன் எம்மாதிரி ஆள் என்றால் , ஒரு காலத்தில் ஒரு வாராந்திரியில் சினிமா கிசுகிசு மாதிரி இலக்கிய கிசுகிசுவும் வந்துகொண்டிருந்தது அதில் ஜெயமோகனை என்னவென்று   விளித்தார்கள் என்று நினைவில்லை , சாரு நிவேதிதாவை கடைசி அட்டையில்   பாரு கவேதிதா என்று எழுதினார்கள் என்று ஞாபகம் .  ஒரு வேளை அவை அனைத்தையும் இவன் எழுதியிருப்பானோ என்று ஐயுறும் அளவு இலக்கிய உலகில் நடக்கும் அத்தனையும் அத்துப்படி . ஜெமோ , நாஞ்சில் நாடன் முதல் அமலாதித்ய கூமொக்லன் வரை அனைவர் பற்றியும் விரல் நுனியில் தகவல்கள் வைத்திருப்பான் . தவிர இலக்கிய உலகில் நடக்கும் ஸ்கான்டல்கள் , குடலைபுரட்டும் நாற்றமெடுக்கும்  இலக்கிய உலக  கள்ள ஓல் மேட்டர்கள்  மற்றும்  குடுமிபுடிச்சண்டைகள்   பற்றியும் நன்கு அறிந்து வைத்திருந்தாலும் , தகவல்களை மட்டும் வெகு அரிதாகவே கடத்துவான் .    

மானுடம் வெல்லுமா? #1

  ஒ ரு மனிதனால் நீருக்கடியில் தோராயமாக எத்தனை நேரம் தம் கட்டி மூச்சு விடாமல் இருக்க முடியும் ? இருபது வினாடிகள் ? அறுபது வினாடிகள் ? நூற்று இருபது ?  மூன்று நிமிடங்கள் ? ஐந்து நிமிடங்கள் ? ஸ்பெயினைச் சேர்ந்த Aleix Segura என்னும் ஆள் 2016 இல் , 24 நிமிடங்கள் தண்ணீருக்குள் சென்று தம் கட்டி அமர்ந்துவிட்டு வெளியே வந்திருக்கிறார் . அதுதான் இன்று வரை உலக சாதனை . ஆனால் தலைவர் சுவாசித்தது சாதாரணக் காற்றை அல்ல , அடர்த்தியில் 99.5% உள்ள சிலிண்டரில் அடைக்கப்பட்ட சுத்தமான ஆக்சிஜனை . சாதாரணக்காற்றைச் சுவாசித்தால் , ஓரிரு நிமிடங்களுக்குளேயே வெளியே வந்து ஒரு இழுப்பு இழுத்துக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் , தத்தமது கர்மவினைக்கேற்ப நேராக சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போக வேண்டியதுதான் . அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறையில் மூர்ச்சையாகிவிட்டு , எப்படியாவது போராடி உயிர் வரவழைத்தாலும் , வாழ்நாள் முழுவதும் ஏதேனும் குறைபாட்டுடனோ , உடலின் ஒரு பகுதி செயல்படாமல் போயோ , அல்லது மீளாக் கோமாவுக்கோ கூடச் செல்ல நேரிடும் . நீருக்கடியில் இப்படி என்றால்