கிளிக்கன்னி பற்றி...

ஏதோ ஒரு பேட்டியில் வா. மு. கோமு, கொங்குத்தமிழானது ஈரோடு மாவட்டத்துக்கும் திருப்பூர் மாவட்டத்துக்குமே மாறுபடும் என்று சொன்னது போல் படித்த மாதிரி நினைவு. அதில் எனக்குப் பெரிதாக உடன்பாடு இல்லைமாறுபாடும்தான் ஆனால் ஈரோடு மாவட்டத்துக்கும் திருப்பூர் மாவட்டத்துக்குமிடையில் அல்ல. கோயமுத்தூருக்கும் சேலத்துக்கும் வேண்டுமானால் மாறும். என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்  தமிழ் வட்டார வழக்குகளிலேயே கொங்குத்தமிழ் வழக்கு ஒன்றுதான் ஒரு பெரிய நிலப்பரப்பிற்குள் அதிகத் தேய்மானமில்லாமல் அப்படியே இருக்கிறது. மற்றவைகள் ஒரு முப்பதிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தாண்டினால் மாறிவிடும். திருநெல்வேலி பாஷை () நெல்லைத் தமிழை எடுத்துக்கொண்டால், அருகிலிருக்கும் தூத்துக்குடியில் பேசப்படும் மொழிவழக்கிற்கும் அதற்குமே அத்தனை வித்தியாசம். ஒரே மாவட்டத்துக்குள்ளேயே பல வேறுபாடுகள். பாளையங்கோட்டையில் பேசப்படும் தமிழ் ஸ்ரீவைகுண்டத்தில் பேசப்படுவதில்லை. நாஞ்சில் தமிழில் காளியக்காவிளைக்கும் மார்த்தாண்டத்துக்குமே கூட வித்தியாசம் உண்டாம். இது தவிர ஒரு நபர் சார்ந்திருக்கும் சமுதாயத்தைப் பொருத்தும் மொழி வழக்கு மாறும். அது தமிழ்நாட்டின் எல்லா வட்டாரங்களுக்கும் பொருந்தும் பொதுவான அம்சம். கொங்கு மண்டலம் அதில் விதிவிலக்கல்ல என்றாலும், பேச்சு வழக்கு என்பது பெரும்பாலும் ஒரே சீராகவும் அதே நேரம் பல உட்கிளைத்தன்மைகளையும் தன்னுள் கொண்டது.  

உதாரணத்துக்கு வடக்கே திம்பத்திலிருந்து தெற்கே பழனி வரையிலான தோராயமான இருநூறு கிலோமீட்டர்களுக்கு பேச்சுவழக்கிலும் கலாச்சாரத்திலும் பொதுப்பண்புகளே  மிகுந்திருக்கும். இந்தளவு பரவிப்படர்ந்த, அதிகம் திரியாத மொழிவழக்கு ஒன்று தமிழ் பேசும் நிலப்பரப்பு ஒன்றில் உண்டென்றால், அது கொங்குத்தமிழ் மட்டுமே. பழனி நகரிலேயே கூட நகரின் மேற்கு மற்றும் வடக்குப்பகுதி முழுதும் சுத்தமான அக்மார்க் கொங்குத்தமிழும், கிழக்கிலும் தெற்கிலிருந்தும் தொடங்கி கொங்குத் தமிழும் மதுரை மண்டலத்தமிழும் கலந்த ஒரு தமிழாகவும் மாறும்.  

ஈரோட்டில் பள்ளிபாளையம் பாலத்தைக் கடந்து நாமக்கல் மாவட்டத்துக்குள் நுழைந்தவுடன், சடீரென்று  'கோயமுத்தூரு ஸ்லாங்' கொஞ்சம் வேறு விதமாக மாறி, 'ரச்சு', 'ராவடி', 'பண்ணவாட்டி', 'செஞ்சவாட்டி' என்றெல்லாம் மாறுகிறது. "ஒரே உப்பசமா இருக்குது" என்றால் கரூர் மாவட்டத்துக்காரனும் சேலம் மாவட்டத்துக்காரனும் சிரிப்பான்கிழக்கு மேற்காக என்று வரும்போது, மண்டலம் என்னவோ கொங்குதான் என்றாலும் கிழக்கே போகப்போக மொழி வழக்கு மாறிவிடும். எங்கு மாறும் என்பது  கிழக்கு மேற்குக்கோடும், தெற்கு வடக்குக் கோடும் எந்த இடத்தில் வெட்டுகிறது என்பதைப் பொறுத்தது. சேலம் நாமக்கல் போன்ற மாவட்டங்களில் கொங்குத்தமிழ் சாயல் உண்டே தவிர, கோயமுத்தூர் வகை கொங்குத் தமிழ் என்பது பெருந்தொகுதியாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களின் வடக்கு மற்றும் மேற்கில் வெகு சில பகுதிகளிலும் பேசப்படும் மொழிவழக்கு என்று கொள்ளலாம்

இது இவ்வாறிருக்க, சமகாலத் தமிழிலக்கியம் என்றால் அது நாஞ்சில் அல்லது தஞ்சைப்பகுதியிலிருந்து வரும் எழுத்துக்கள்தான் என்று இருந்தது. கொங்கு மொழிவழக்கில் இலக்கியங்கள் வராமல் இருந்தது ஒரு பெருங்குறைஒரு இருபது வருடங்களாகத்தான் புத்திள எழுத்தாளர்கள் வா.மு. கோமு மற்றும் கசீ. சிவக்குமார் போன்றவர்கள் புண்ணியத்தில் வர ஆரம்பித்திருக்கின்றன. இப்போது சத்தியப்பெருமாள் பாலுசாமி அதில் சேர்ந்திருக்கிறார்.

இது நடுகல்லில் வெளியான முக்கியமான கதைத்தொகுப்பான கிளிக்கன்னி என்னும் சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஒரு சிறு வாசக மதிப்புரை.

இவர் எழுதும் கதைகளில் வரும் மொழிக்கூறுகள் மற்றும் வழக்குகள் எனக்கு 0.01% கூட அந்நியமாகத் தெரியவில்லை. நன்கு பரிச்சயமான, நான் கேட்டும் பேசியும் வளர்ந்த மொழிவழக்கில் வரும் நடை. தற்காலங்களில் ஆளாளுக்கு வீட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனரும், ஹூண்டாய் க்ரெட்டாவும் வைத்துக்கொண்டு, வண்டிபோட்டுக்கொண்டு பாய்ந்து சில மணிகளுக்குள்ளாகவே மாநிலங்கள் கடந்து போகிறார்கள். அதற்கு முன்பிருந்த ஒரு உலகத்தில், எண்களிட்டபுளியமரத்தடி பேருந்து நிறுத்தத்திலிருந்து கைகாட்டி காண்பிக்கும் தடத்தில் ஆறு கிலோமீட்டர் ஒற்றையடிப்பாதையில்  உள்ளே சென்றால் அமைந்த ஏதோ ஒரு கொங்கு மண்டல ஊரில் கண்ணைக்கட்டி இறங்கிவிட்டால், அங்கு பேசப்படும் வட்டார வழக்கானது

அது பவானி பக்கத்தில் இருக்கலாம், கோபி, அந்தியூர்பவானி, காங்கயம், தாராபுரம், நத்தக்காடையூர், குண்டடம் அல்லது பொள்ளாச்சி, உடுமலை, பல்லடம் என்று எந்த ஊர்ப்பக்கத்தில் உள்ள கைகாட்டியிலிருந்து ஐந்தாறு கிலோமீட்டர்களுக்குள்ளுள்ள சிற்றூரின் மொழிவழக்காக இருந்தாலும் அச்சு அசலாக ஒரே போல் இருக்கும்

படரப் பிச்சுவுட்ருவேன்

வெதுப்புவது 

புரடை (புருடை)

சீவக்கட்டை

பூச்சி  - பூச்சி என்றால் என்ன என்று கொங்கு மண்டலத்தவர் அல்லாதவர்கள் பலருக்கும் தெரியாது

இவை தவிர சல்லக்குச்சி, செருப்புத் தொட்டுக்கிட்டுஓவாளம், பேசுவாங்க, பூச்சி கடிச்சுட்டுதுகரிஞ்சுக்குட்டிக் கீர, நீக்கு, முடுக்கு என்று பட்டியல் பெரிது. தமிழ் சினிமாக்காரர்களும் சோ கால்டு 'கோயமுத்தூர்  ஸ்லாங்' பேசுகிறேன் பேர்வழி என்றுவிட்டு, பார்டர் விட்டு பார்டர் போய் பிள்ளை பிடிக்கிறவன் கூட்டம் பேசும் பேச்சு வழக்கில், குரல் ஏற்ற இறக்கங்களுடன், வார்த்தைக்கு வார்த்தை என்ரா, ஒன்ற, என்ற, சொல்லிப்போட்டு, வந்து போட்டு, போய்ப்போட்டு என்று பேசினால் அது கொங்குத் தமிழ் என்று நினைத்துக்கொண்டு பார்க்கிற அல்லது கேட்கிற நம்மை, துருப்பிடித்த மொன்னைப் பிளேடை விழுங்கவைத்து பேதி புடுங்க வைக்கிறார்கள். இந்தப் பிரச்சனை ஆரம்பித்தே சேரன் பாண்டியன், சின்னக்கவுண்டர் போன்ற படங்கள் வந்தபிறகுதான். சரத்குமார், விஜயகாந்த் போன்றவர்கள் மெயின் லீட், அவர்களை மெனக்கெட வைத்துப் பேச வைத்ததைக் கூட கதைக்கேற்ப தங்களை வருத்திக்கொண்டு கதைக்கு நியாயம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் மற்றவர்களை பூச்சாண்டி மொழி வழக்கில் எதற்கு ஐயா மார்களே பேசவைத்து வஞ்சகம் செய்தீர்கள்

என்னைப்பொறுத்த வரை சத்தியராஜ், கவுண்டமணி, பொன்வண்ணன், கோவை சரளா, அனுமோகன், மணிவண்ணன், பிறகு சில படங்களில் பூசாரி வேடத்தில் வருவாரே? அவர் போன்ற வெகுசிலரைத் தவிர்த்து வேறு யாரும் கொங்குத் தமிழ் என்று வந்தால் டப்பிங்கே பேசக்கூடாது என்று தடை போடச்சொல்லவேண்டும் என்றும் நினைத்ததுண்டு. ஒன்றையணா சினிமா, வசனங்கள் என்று வரும்போதே இவ்வளவு நெளியும் நான் ஆறுதலடைந்தது எழுத்தில் யாரும் இந்தக் கொலை பாதகத்தைச் செய்யாமலிருப்பதுதான்.

நான் மேற்சொன்ன பதங்களெல்லாம் ஈரோடு-தாராபுரம்-மூலனூர்-வெள்ளகோவில் பகுதிகளில் புலன்விழித்துஉழன்று வளர்ந்த எனக்கு ஒரு வார்த்தை கூட அந்நியமாகத் தெரியவில்லை

சத்தியப்பெருமாள் பாலுசாமியின் ஊர் பவானி, சத்தியமங்கலம்  அல்லது அந்தியூர் பகுதிகளில் உள்ள ஏதோ ஒரு ஊராக இருக்கக்கூடும்இதுவுமே சுவாரசியம் கருதி அவரிடம் கேட்காமல் நானாகக்  கணிக்கிறேன்.

 துடியான சாமி என்கிற கதை அவ்வளவு நேர்த்தி. 'தடி எடுக்கையிலேயே அடி இத்தனை' என்கிற சுய சாமார்த்தியத்தை மெச்சிக்கொள்ளும் சொலவடை, 'அவீர் பவீர்' என்கிற வழக்கு, நரை மயிரில் ஒட்டிய பேன்குஞ்சுபோல என்னும் ஆசிரியரின் உவமானம் போன்றவை செய்நேர்த்திக்கு மேலும் மெருகூட்டுகின்றன.   சேவலை அடித்துச் சாப்பிடத் திருடியதும்மட்டுமல்லாமல் எதிரி வீட்டுச் சேவல் என்ற சம்ஷயம் வந்ததும் திருடிய திருப்தி இரு மடங்காவது. நேர்ந்துவிட்ட கோழி என்று தெரிந்த பிறகும் அதற்குச் சமாதானம் சொல்லிக்கொள்வது என்று சுவாரசியத்துடன் எள்ளலும் தூக்குகிறது. முடிவில் தொடும் நகை முரணும் முழுமை பெற்ற ஒரு சிறுகதையை வாசித்த நிறைவை அளிக்கிறது

இளங்கோவின் இரவுகளிலில் 'பவுடரடிச்சு' என்பதற்குப் பதில் 'பகுடரடிச்சு' என்று எழுதியிருந்தால் மண் மணம் இன்னும் தூக்கியிருக்கும். இது ஒரு போதை என்பதால் போதாது என்று மேலும் கேட்கிறேன். ஏற்கனவே கொங்கு மொழி வழக்கை எழுத்தெழுத்தாக உழைப்பைக் கொட்டிச் செதுக்கியிருப்பது மட்டுமன்றி, அபூர்வமான நிலாப்பிள்ளைப் பாடல்களையும், ஒப்பாரிப்பாடல்களையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். வெறும் ஆவணப்படுத்தியிருக்கிறார் என்று குறிப்பிட்டால், அது தொகுப்பு வேலை செய்தார் என்று சொல்லிவிடுவதற்கொப்பானது. ஆனால் அதுவே கூடச் சாதாரணமான விஷயமல்ல, கதிரம்பட்டி பிரிவிலிருந்து வெள்ளோட்டிற்கு வண்டியை விட்டால், புங்கம்பாடி வருவதற்குளான தொலைவுக்குள் நூற்றுக்கணக்கான சொலவடைகளும் பாடல்களும் இருக்கக்கூடும். புனைவுக்குள் வெகு இயல்பான ஒரு கூறாக இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளில் பாடல்களும் மூத்தோர் வழக்குகளும் வருகின்றன.

'இளங்கோவின் இழவுகள்' என்ற சிறுகதையில் உள்ள உள்ளீடு மற்றும் அது பேச விழையும் படிநிலைச் சிக்கல் வெகு எளிதான மற்றும் நேரடியானது. இது ஒரு உலகளாவிய பொதுச்சிக்கலுமாகும்மூன்றாம் உலக நாடுகளில் (இது ஒரு தேய்வழக்காகாக ஆகிவிடினும்!) உள்ள யார் வாசித்தாலும் இந்த ஆக்கமானது மொழிபெயர்ப்பில் வெளியாகும் பட்சத்தில், இக்கதையினுடைய மைய இழையுடன் உடனடியாகப் பொருத்திக்கொள்ள இயலும். இவ்வளவு ஏன்? மேற்குலகிலும் கூட Odd Man Out அல்லது Socially Oppressed  என்கிற ரீதியில் புரிந்துகொள்ளப்படும். உண்மையில் இக்கதையில் நடப்பதுபோல் சாத்தியமா? அல்லது இது வெறும் புனைவில் மட்டும் சாத்தியப்படும் ஒன்றா என்பது  விவாதத்திற்குட்பட்டது. ஏனென்றால் கதையல்லாத ஒரு நிஜ உலகத்தில் ஆளை வெட்டிப்போட்டுவிடுவார்கள் அல்லது விஷம் ஊற்றிவிடுவார்கள்இக்காலத்தில் நிலைமை எந்தளவு மாறியிருக்கிறது என்று தெரியவில்லை.

சில கதைகளை விளங்கிக்கொள்வதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. மீண்டும் ஒரு முறை வாசிக்கவேண்டியிருக்கிறது. கரைவளர் நாதர் அதில் ஒன்றுஆங்காங்கு திருவாசக வரிகள் வருகின்றனசிடுக்குகள் சிக்கல்கள் இல்லாத நேரடியான கதை சொல்லல் என்றாலும், இவரது நடை ஒரு பூடகத்தைமையை ஏற்படுத்துகிறது, வாசிப்பின் விறுவிறுப்பை இறுதிவரை தக்கவைத்துக் கொண்டே இருக்கிறதுஇலக்கியங்களிலோ, பொதுத்தளங்களிலோ பெரிதாக விவாதிக்கப்படாத சிவாச்சாரியார்களின் வாழ்வியலின் ஒரு மீச்சிறு  கூறு இக்கதை வாயிலாக வெளிப்படுகிறது

வித்தாரக்கள்ளிகள் - பரம்பரைப் பொய்ச்சிகள் பற்றிப் பேசி முகத்தில் குறுநகையை வரவழைக்கிறது. தாய்வழிச் சீதனமாகப் புரட்டுகள் தொடந்துகொண்டே இருக்கின்றனதாய்வழி தந்தை வழி என்றல்ல, பல வேளைகளில் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களின் வழிகூட தொடர் புரட்டுகள் நிகழ்த்தப்படும் என்பதற்கு இக்கதை ஒரு சான்றுரை.

'இளங்கோவின் இழவுகளில்' நிகழாதது 'சுழல் கழியில்' நிகழ்கிறது. இங்கு வாணியாறு என்று . பெ. பா  குறிப்பிடுவது பவானியாறு என்று புரிந்துகொள்கிறேன். ஊர்த்திருவிழாவில் நடக்கும் கேளிக்கைகள் மற்றும் அங்கு பாடப்படும் பாடல்கள் போன்றவை நினைவில் உயிர்பெறுகின்றன.

கிளிக்கன்னி  - இங்குதான் கதை நின்று ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேசுகிறது. ஆரம்பம் முதல் முடிவு வரை அற்புதம். ஒரு மாற்றுக்கும் குறைவிலா அருமையான தர்க்கம் மற்றும் விவாதம். தொடக்கத்தில் முன்னுரையில் என் கதைகளில் கெட்ட வார்த்தைகள் வருகின்றன, யாருமே பதிப்பிக்க முன்வரவில்லை, நடுகல்தான் முன்வந்தது என்று எழுதியிருந்தார். என்னது கெட்ட வார்த்தைகளா? வார்த்தைகளில் என்ன நல்ல வார்த்தை கெட்ட வார்த்தை? இலக்கியம் என்று வரும்போது வசைகள் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதிலெல்லாம் என்ன விலக்கு இருக்கிறது என்று நினைத்தேன்

கதைக்குள் கிளியானது பெண்ணுடல் அரசியல் பேசுகிறது. மேற்குலகில் பாலுறவு, பாலியல் உறுப்புகள், மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றைப் பற்றிப் பேசுவதெல்லாம் அது ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் ஒரு பிரச்சனையே இல்லை. பெண்கள் Fuck, Cunt, Boobs என்றெல்லாம் எந்தளவு சுதந்திரமாகப் பேசுகிறார்களோ அதே அளவு ஆண்களும் பேசுகிறார்கள். அதற்காக பொழுதன்னிக்கும்  Fuck, shit, cunt, boobs என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதில்லை. அதே நேரம், இவைகள் வசை வார்த்தைகள், அவ்வாறு பேசுவது பெருமைக்குரிய விஷயமில்லை என்பது மாதிரியான ஒரு மதிப்பீடும் கூட உண்டு. என்ன ஒன்று, வசைகள் பயன்படுத்துவதில் ஆண் பெண் என்று பேதமில்லை அவ்வளவுதான். அந்த அளவில் இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.

இதையே அப்படியே இந்தியச்சூழ்நிலையில் பொருத்திப்பார்க்கலாம். வேசி, தாசி, தேவரடியாள் என்பதற்கெல்லாம் திருப்பாவையில் வருகிறது, திருவெம்பாவையில் வருகிறது என்றெல்லாம் விளக்கம் கொடுக்கலாம். இலக்கியத்தில் கண்டிப்பாக அதைபற்றிப் பேசியே ஆக வேண்டும், அதிலெல்லாம் எந்த விலக்கோ தயக்கமோ கூடாது. அதிலெல்லாம் எந்தச் சந்தேகமும் இல்லைநாஞ்சில் நாடனும் உவத்தல், பிடுக்கு, புண்டை, ஊம்புதல் என்றெல்லாம் விளக்கம் கொடுக்கிறார்தான். அதே சமயம் இந்த நாஞ்சில் நாடன் மற்றும் கிளிக்கன்னி வியாக்கியானங்களை மிகச்சரியாகப் புரிந்துகொள்ளும் ஒருவரைப் பார்த்து யாராவது

உங்கொம்மாள ஓக்க என்றோ, உம்பொண்டாட்டி கண்டாரஓலி, தேவுடியா, உம்பொண்டாட்டியோட அல்குல்ல ஓக்க என்றோ யாராவது சொன்னாலோ, இந்த வியாக்கியானங்களைப் பொருத்திப்பார்த்துச் சமாதானமடைய முடியுமாமுடியாது, கொலை வெறி வரும். ஏனென்றால், கீழ்த்திசை நாடுகள் அனைத்தும் மிக மோசமான ஆணாதிக்க சமுதாயமாகக் கட்டமைக்கப்பட்டதாகும். எவ்வளவு முற்போக்கு பேசினாலும், உங்கொம்மா என்று சொன்னதும் குடும்ப கவுரவம் மொத்தமும், அம்மா, பொண்டாட்டி, அக்கா தங்கைகள் மற்றும் மகள்கள் கற்பில்தான் உள்ளது என்று நம்புகிறோம். மகள்களுக்குப் பதில் பெண்டாட்டி ஈனிய வாரிசுகள், அது ஒன்றோ அல்லது இரண்டோ ஒரு கோட்டர் இஞ்சு குஞ்சாமணியுடன் மட்டும் பிறந்துவிட்டால் போதும், அதுகளுடைய அப்பன்களுக்கு வரும் வீரம் இருக்கிறதே!? என்னவோ உள்ளே விட்டு ஆட்டி ரெண்டு சொட்டு ஒழுக்கும்போதே கண்ட்ரோல் செய்துசிங்கக்குட்டிகளை உள்ளே பீய்ச்சி அடித்ததுபோல் ஒரு பெருமிதம்.    

அதாவது நீங்கள் ஆணாதிக்கத்திலிருந்து விலகுவதற்கும் உங்கள் மீதே அடக்குமுறை செலுத்தப்பட வேண்டும்? அப்போதுதான் அடங்குவீர்கள்? அக்கா தங்கையுடன் பிறந்தவர்கள், மகள்களுக்குத் தகப்பன் என்று இருப்பவர்களெல்லாம் இது பற்றியெல்லாம்  மூச்சே காட்ட மாட்டார்கள். வீட்டில் உடன் பிறந்ததுகள் அனைத்தும் ஆண், தனக்குப் பிறந்ததுவும் ஏதோ தன் அதீத ஆண்மை காரணமாகத்தான் தன் பொண்டாட்டி குட்டி போடும்போது ஆண் குட்டி போட்டிருக்கிறாள் என்று என்னும் ஆணாதிக்க சிகாமணிகள்தான் பெண்ணுடல் சுதந்திரம் பற்றித் திமிறிக்கொண்டு குண்டி கொளுத்துப் போய் பேசுவார்கள். மற்றபடி இந்தக் கதையின் ஆசிரியர் துணிந்து எழுதுவது  வரவேற்கத்தக்கது.

சரி இதுபோல் சூத்துக் கொழுப்பு காரணமாக வரும் ஆணாதிக்க மனோபாவத்தை எப்படி மாற்றுவது? இனிமேல் வசைகள், உங்கொப்பனக் குனியவச்சிக் குண்டியடிக்க, உங்கொண்ணன் சூத்துல சுண்ணாம்புத் தடவி ...என்றெல்லாம் விரித்துக் கொண்டு போகவேண்டும்

ஆண்கள் குண்டி கொடுத்துவிட்டு வந்தால், அது பெரிய வழுவுதல் இல்லை, ஆண்கள் சூத்தடியிலெல்லாம்   குடும்ப கவுரவம் போய்விடாது, என்ற மைண்ட் செட்டுக்கு வந்த பிறகு, தன் வீட்டுப் பெண்களை யாரேனும் வசை பாடினாலும், எப்படி நம் சூத்தில் குடும்ப மானமும் கவுரவமும் இல்லையோ, அதே போல் என் வீட்டுப் பெண்களின்  முலைகளிலும் அல்குல்லிலும் கூடக் குடும்ப கவுரவம் ஒட்டிகொண்டில்லை என்று உணர்வார்கள். எழுத்தாளர்களும், பழைய இலக்கியங்களில் பெண்களின் பாலியல் தேர்வு, இச்சை, அல்குல் முலைகள் பற்றிய தாராள விவரணைகள் ஆகியன பற்றியெல்லாம் கவலைப்படாமல் சூத்தையும் வாயையும் பொச்சையும்  மூடிக்கொண்டு நழுவிவிடுவார்கள். பெண்கள் என்றால் அவ்வளவு இளப்பமா? அட ஏற்கனவே வட இந்தியாவில்  மனித குலத்தில் பிறக்கவே அருகதையில்லா மிருகங்கள் யாரையும் விட்டுவைப்பதில்லை, ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல், வன்புணர்ந்து கழுத்தறுத்துக் காட்டுக்குள் வீசிச்செல்கின்றன.

அடுத்தது நங்கையாளைப் பெண்டாள நினைக்கும் கொழுந்தனின் கதைஊழ்வினை அவனைத் திரும்ப அடிப்பது என்பதெல்லாம்  ஒரு தனிக்கதையாக எழுதும் அளவு கச்சாப்பொருள்கள் நிறைந்த ஒன்று. அதைத் தவிர்த்துப் பார்த்தால், கரீஞ்சோறு என்னும் இக்கதைதான் என்னைப்பொறுத்தவரையில் மொத்தத்தொகுதியின் மகுடம் என்று குறிப்பிடுவேன்.

புலால் விலக்கல், அதன்பிறகு அதன் மீதான ஏக்கம், கடைசிவரை ஏங்கி ஏங்கியே மடிந்தும் போவது

சிறு வயதில் பள்ளியில் சண்டையிட்டு உருளும்போது, இரண்டு நான்கு என்று தடியர்கள் என் மேலேறி அமுக்குவர். பிடியிலிருந்து தப்புவதற்காக அவர்கள்  கைகளைக் கடித்துவைப்பதுண்டு. கடி வாங்கிய தடியன்கள், என்னிடம்

"ஏன்டா கறி வெறி புடிச்சுப்போயி கடிக்கரையாடா தாயோளி? உங்கொய்யங்கட்டச் சொல்லி அரக்கலோ எச்சா மட்டன் எடுத்தாராச் சொல்ல வேண்டீத்தான?" என்று சொல்லி மேலும் சாத்துவார்கள்

ஆமாண்டா தடித்தாயோலிகளா, நோய்வாய்ப்பட்டு உடல் நலிந்துபோன, இறைவன் நாம ஜெபத்தைத்தவிர வேறொன்றும் அறியாதஇன்றோ நாளையோ என்றிருக்கும் என் பிள்ளைப் பூச்சித் தாயிடம்  சென்று - 

"எனக்கு கறி வெறி புடிச்சிருத்தாம், அதுனால பழ்ன்ச்சாமி கேங் என்னைய போட்டு அடிக்கறச்சே உங்காத்துல சொல்லி அரக்கிலோ மட்டன் எக்ஸ்ட்ரா வாங்கி சமைக்கச் சொல்லுன்னு சொன்னான். அண்ணா எப்போ வருவேர்? அவராண்ட பணம் வாங்கிண்டு போய் நானே முக்காக் கிலோ வாங்கிண்டு வந்துர்றனே "  என்று சொல்வேன். உடனே என் தாயாரும்,  

" புடிச்சுருத்தா? பேஷ் பேஷ். பாய் கடைல நல்ல எளசா எலும்புக் கறி வாங்கிண்டு வந்து, நன்னா பெருங்காயம்  வரமொளகாயெல்லாம் போட்டு வதக்கி வத்தக் கொழம்பு பண்ணித்தரேன்

என்று சொல்லி ஆற்றுப்படுத்தி, தற்காப்புக்காகக் கடித்துத் தப்பும் என் கறி வெறியைத் தனிப்பாளென்று மனதுக்குள் கருவியதுண்டுஇவ்வளவுதான் கரீஞ்சோறுக்கும் எனக்குமுள்ள சங்காத்தம். இக்கதையில் 'கறிவெறி' என்கிற பாவிப்பு வரவில்லையென்றாலும்நான் சிறுவயதில் கேட்ட வசை மூலமாக புலால் உணவின் ஏக்கத்தை நன்றாக விளங்கிக்கொள்ள முடிகிறது

கறிவெறி என்பது ஒரு குறியீடு, ஏக்கம் அல்லது ஆங்கிலத்தில் க்ரேவிங் (Craving). அது ருசிகண்ட பூனையிடம் உள்ளதுபோலானதொரு தீரா இச்சை

அடங்கா ஆசை, விருப்பம், ஏக்கம்  என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். முள்ளெலிகளையும், வீட்டுப்பூனையையே அடித்துத் தின்பதும், ஒருவாய்க் கறிக்காக ஏங்கிச் சாகத்தெரியும்  இக்கதையில் வரும் நல்லக்காள் என்பவள் வெறும் ஒரு கதை சொல்லலுக்கான நிமித்தம் மட்டுமே என்று நான் கருதுகிறேன்

புலால் மட்டுமல்ல, புலால் விலக்குள்ள நான் பிறந்த சமுதாயத்திலேயே, அந்திமக்காலத்தில் துணையை இழந்து நாவுக்கு ருசியான சோற்றுக்கு வக்கில்லாமல் ஒரு வாய்ப் புளிப்பொங்கலுக்கும், நல்ல மிளகுரசத்துக்கும், வாழைத்தண்டுப் பொரியலுக்கும் மருமக்கள் கருணைக்காக ஏங்கிச் செத்த ஆன்மாக்களைக் கண்டதுண்டு.   

இந்த இடத்தில் 'கறீஞ்சோறு' என்பதை ஏக்கத்தின் குறியீடாகக் கொண்டால், அதைக் கடப்பது என்பது பெரும்பாடு. அதில் சென்று சிக்கிவிட்டால், இறுதிவரை ஏங்கி ஏங்கியே மடிந்து மண்ணுக்குள் சென்று மக்கியபின்னும், எரிந்து அடங்கிச் சாம்பலான பிறகும் கூட நீங்காது தலைமுறைகள் கடந்தும் விரட்டும் 'கறீஞ்சோறு'. 

ஒரு அற்ப விஷயத்துக்காக ஏங்கி ஏங்கியே உயிர் நீத்த மூத்தாரின் ஏக்கங்களை அத்தைகளில், சித்தப்பாக்களில், அக்காள்களில், தங்கைகளில், மகன்களில், மகள்களில், பேரன்களில், பேத்திகளில் என்று வந்து உட்கார்ந்து விடாது விரட்டுவதைக் காணலாம்.  

'கறீஞ்சோறு' உந்த உந்தப் பணம், பதவி, புகழ், வன்மம், அதிகாரம், இன்பம், இச்சை, பழி போன்றவற்றுக்காக ஏங்கி ஏங்கி அவற்றை அடைவதற்காக எந்த அளவுக்கும் இறங்கத்துணிகிறார்கள்சுயநலத்தின் எல்லையான 'கறீஞ்சோற்றை'க் கட்டுப்படுத்தமுடியாமல், கடத்தல்கள், கொலைகள், மிரட்டல்கள் வாயில்லாப் பூச்சிகளான எளியோர் மீதான தாக்குதல் என அது விரிந்து சென்றுகொண்டே இருக்கிறது.  ஒடுக்குவதும் 'கறீஞ்சோறு' தான் ஒடுக்கப்படுவதும் 'கறீஞ்சோறு' தான்.

 'கறீஞ்சோறு' ஒரு தளை. பற்றற்ரிரு, தளை அறு என்று கீதையானது, பெருங்காதை ஒன்றின் வாயிலாக உரைக்க முயல்கிறது. வெகுமக்களுக்கு அது மேலோட்டமாக விளங்குவதுபோலத் தெரிந்தாலும், அதற்குள் ஆழமாக  உட்செல்வதில்லை. ஆனால் பவுத்தத்தின் ஆற்றல் வாய்ந்த மெய்ஞானக் கருவிகளில் ஆகச் சிறந்த கருவியான தியானத்தில், அதாவது விபாஸனாவில் தளையை அறுத்தெறிவது என்பது எந்தளவு  சாத்தியம் என்பதை  நடைமுறை ரீதியில் உணர்த்துகிறார்கள்

'கறீஞ்சோறு' எழுதும்போது ஆசிரியர் இத்தனை கண்ணிகளை உள்ளே வைத்திருப்பாரோ தெரியாது. ஆனால் என்னைப்பொறுத்தவரை 'கறீஞ்சோறு' கதை தொடும் மெய்யியல் உச்சங்கள் அலாதியானவை. சிந்திக்க வைப்பதுவும் புதிய மெய்யியற் தரிசனங்களை சாத்தியப்படுத்தவல்லதும் கூட.

Comments

  1. இத்தனை விரிவான விமர்சனத்தை எழுதிய தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த அன்பும் நன்றிகளும் அன்பும் தோழர்.

    நீங்கள் சரியாகவே கணித்தீர்கள். நான் பவானிக்காரன் தான். வாணியாறு என்பது பவானியாறு தான்.

    எனக்கும் மிகவும் பிடித்தமான கதை கறீஞ்சோறு தான் தோழர். அதில் பல கண்ணிகள் உண்டு. நங்கையாளைப் பெண்டான என்னும் கொழுந்தனின் கண்ணி என்பது கதையின் ஒரு சிறு அங்கம் தான். கதையின் மையக்கரு என்பது கறீஞ்சோற்றிற்கான ஏக்கம் மட்டுமே.

    கறிச்சோறு என்ற தலைப்பில் முன்னமேயொரு நூல் உள்ளதால், கிளிக்கன்னி எனப் பெயர் வைத்துக்கொண்டோம். எனது முதல் தேர்வு கறீஞ்சோறு என்னும் தலைப்பாகத் தான் இருந்தது.

    இளங்கோவின் இழவுகள் கதையைப் பற்றி அண்மையில் இன்னொரு வாசகரும் உங்களுடைய கருத்தினை ஒட்டிய கருத்தைப் பகிர்ந்திருந்தார்.

    மிக விரிவாக உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு மீண்டும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்களது விரிவான கருத்துப் பதிவிடலுக்கும் என்னுடைய அன்பும் நன்றிகளும். 'கறிச்சோறு' க்கு மாற்றாக 'கரீஞ்சோறு' என்பதுவுமே ஒரு சுவாரசியமான விஷயம். 'கறிச்சோற்றை' விட 'கரீஞ்சோறு' தான் இன்னும் பொருத்தமாக இருக்கிறது. இக்கதையைப் பற்றி நான் எழுத நினைத்து மறந்துபோன நீங்கள் சொல்ல வரும் வேறு ஒரு கோணம், உங்களது பாலமலை அதிசயங்கள் என்னும் கட்டுரையிலும் உள்ளது. அந்தத் தொகுப்பில் உள்ள பல கட்டுரைகளுமே ஒரு நல்ல புனைவுகளுக்கானவை. எழுத நினைத்து விடுபட்டதில் ஒன்று - ஒருவரை சிறு விஷயம் ஒன்றிற்காக ஏங்கவைத்துச் சாகடிப்பது என்பதும் ஒரு வதைதானே? மறுதலிப்பும் புறக்கணிப்பும்கூட அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்குமான குறியீடுதானே? நல்லாளிடம் தான் உண்ண விரும்பும் உணவை சுதந்திரத்துடன் உண்ண முடிகிற உரிமை இல்லைதானே? மறுக்கப்பட்ட உரிமையும், வலிந்து ஊட்டப்பட்ட ஏக்கமும் அடக்குமுறைதான். இதையும் நான் எழுதியிருக்க வேண்டும்.

      Delete
    2. நான் சொன்ன கருத்துகள் மற்ற வாசகர்களுடன் ஒத்துப்போவதும், கரீஞ்சோறு கதை தான் உச்சம் என்று நான் எழுதியதுடன் மற்ற நல்ல வாசிப்பாளர்களும் உடன்படுவது போன்றவை

      1. என் வாசிப்புத் திறன் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது.
      2. Touching lives through writing என்று சொல்வார்களல்லவா? அதாவது வாசிப்பவரால் புனைவில் பொருத்திக்கொள்ள முடிவது என்பது எழுத்தாளரின் வெற்றியும் கூட.

      உங்களது எழுத்துக்கள் மென்மேலும் மெருகேற அன்புடன் வாழ்த்துக்கள்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15