நண்பகல் நேரத்து மயக்கம்

ன்ஸ்டாவில் எனக்கு கணக்கு இல்லை, ஆனால் ஃபேஸ்புக்கில் இன்ஸ்ட்டா ரீல்கள் வருகின்றன. அவற்றில்

"சுடச்சுட ஒரு பிளேட் காடை பிரியாணி வாங்கிவாழ எலைல கொட்டி, சைடுல கொடல்கறி, தலக்கறி, கெடா ஆட்டுக் கொட்டக்கறிமூளக்கறி, ஈரல், ரத்தப்பொரியல் எல்லாத்தையும் வச்சி நல்ல்ல்ல்லா  பெனஞ்சு விட்டு அப்புடியே எடுத்து வாய்ல வச்சா..."

என்றோ...  

"மட்டன் பிரியாணி, கத்திரிக்காய் கிரேவி, சிக்கன் சிக்ஸ்ட்டி ஃபைவ், ரைத்தா ப்ரெட் அல்வா  எல்லாத்தையும் வச்சி கொழப்பி ஒரு அடி  அடிச்சா..."

என்றோ... அல்லது

"கிழி புரோட்டா, கொத்துக்கறி, ஆப் பாயில், சால்னா எல்லாத்தையும் போட்டுக் கொழப்பி, ஒம்மாள ஒரு புடி புடிச்சா..." 

என்றோ, காட்டு மேனிக்குத் தின்று, அதை க்ளோசப்பில் வீடியோ எடுத்துப் போடுகிறார்கள். அவை எல்லாவற்றிலும் தவறாமல் சீதபேதி வந்த மாதிரி ஒரு மசாலாக் குழம்பை ஊற்றி, வழித்து வழித்து நக்குகிறார்கள். இவன்கள் ஃபுட் லவ்வர்ஸாம்!!! 

"ஃபுட்டையே இப்புடி சோலி பாக்கற மாதிரி எப்புடி ரசிச்சி ரசிச்சி நக்கராம் பாருடி, ஃபுட்டையே இப்புடி நக்குனாம்னா..."

என்று அதைப் பார்க்கும் டூ கே கிட்ஸ் 'புல்லிங்கைகள்' ரசித்து ஆர்ட்டின் விடுமாம். இவன்களின் மூஞ்சிகளை சாதாரணமாகவே கண்கொண்டு பார்க்கமுடியாது, இதில் இவன்கள் ரசித்து ருசித்து  சீதபேதியை அனுபவித்து நக்குவதையும் நாம் ரசித்துப் பார்த்துவிட்டு, லைக், கமெண்ட், ஷேர் வேறு செய்ய வேண்டுமாம். இவன்களுக்கென்று ரசிகர் பட்டாளம் வேறு உண்டாம். நடிகனின் உருவப்படத்துக் குண்டியை பால் ஊற்றிக்கழுவிவிடும் ஒரு சமுதாயத்தின் ரசனைத்தன்மை இதிலிருந்து மாறுபட்டிருந்தால்தான் ஆச்சர்யம்அடுத்தவன் செய்வதை வேடிக்கை பார்த்து ரசிக்கும் வாயரிஸ பிரச்சனை 'மேற்படி' விஷயத்தில் மட்டும்தான் நடக்கும் என்று நினைத்தால், இப்போது சொழட்டி சொழட்டி பிரியாணிச் சோற்றையும், கோழிக்கழிசலையும் நக்குவதை ரசிப்பதிலும் கூட வாயரிஸம் உண்டு என்று நினைக்கத் தோன்றுகின்றது.

மேற்கண்டது அசைவ அலப்பறை என்றால், தயிர்ச்சோற்று தத்திக் கபோதி மவன்களின் இன்ஸ்ட்டா ஃபுட் ரீல்கள் மேற்படியான்களிடமிருந்து கொஞ்சமும் மாறுபட்டதல்ல. விட்டால் அப்படியே வாய்க்குள் ஒரு புனலை எடுத்து விட்டுக்கொண்டு அரை அண்டா சுடு சாம்பாரை ஆள் வைத்து விட்டுக்கொள்வான்கள் போலிருக்கிறது

இப்படியெல்லாம் நாள்தோறும் நாய்த்தீனி, பேய்த்தீனி தின்றுகொண்டிருந்தால், விலைவாசி ஏறாமல் என்ன செய்யும்? இக்கருத்து அறிவுக்குப்புறம்பாக இருப்பதாக 'கூ'த்தறிவு ஆட்கள் நினைக்கலாம். அதற்கான ஒரு சிறு பின்புல நினைவூட்டல். 

சிறு வயதில் ஒரு 'நாக்யிரூட்டுப் பையன்' அடிக்கடி என்னிடம் வந்து

"உங்காளுக கறி திங்க ஆரம்பிச்சதுல இருந்து மட்டன் இப்ப கிலோ எவ்ளோ தெரியுமா?" என்று கேட்பான்

" நம்மாளுக கறி திங்க ஆரம்பிச்சுட்டானுகளா? அப்ப இனிமேல் இது ஒரு பெரிய சோஷியல் டபூவே இல்லை" என்று நம்பிக்கொண்டு வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் -  

"நம்மளவாள்ளாம்  மட்டன் ஷாப்ட ஆரம்பிச்சுட்டாளாம், நாக்கிரு பையன் ஷொல்றான். நம்பளவாள்ள மிச்சம் மீதி உள்ளவாள்ளாம் ஆரம்பிக்கறதுக்குள்ள நம்மாத்துல ஆரம்பிச்சிடலாம். வெல ஏறிடுத்துன்னா அப்பறம் கஷ்டம்

அவ்வளவுதான், அன்றிலிருந்து ஒரு மாதம் எனக்கு சோறில்லாமல், உப்பில்லா அரை வயிற்றுக்கஞ்சியுடன் குண்டி காய்ந்தும் உயிர் பிழைத்திருப்பது எப்படி  என்று பாடம் கற்பிக்கப்பட்டது. இன்றளவிலும் வாழ்க்கைக்கும் மறக்காத, குண்டி காய்ச்சலுக்கு அஞ்சாத வாழ்க்கைப்பாடம் அது என்றால், அது மிகையாகாது

சரி நாம் சப்ஜெக்டுக்கு வருவோம். விலை ஏறுவது என்பதெல்லாம் சும்மா மிகைப்படுத்தல் என்று வைத்துக்கொண்டாலும், இவ்வளவு சோற்றை வேலை நேரத்துக்கு நடுவே பாத்தி கட்டி அடித்துவிட்டு, இவர்களெல்லாம் என்ன வேலை செய்வார்கள்

இப்போதெல்லாம் எந்தக் கேன்டீன் இருக்கட்டும், அல்லது பெரிய கார்ப்பரேட்டுகளின் கஃபேட்டேரியாக்கள் இருக்கட்டும், எங்கு போனாலும், புல் மீல்ஸ், விதவிதமாக கலவைச் சோறு, சப்பாத்தி, புரோட்டா, பிரியாணி, குஸ்க்கா என்று வகைதொகையில்லாமல் இந்தியாவில் இருக்கும் அனைத்து வகை உணவுகளும் கிடைக்கின்றன. வேலைக்கு வருபவர்களும் சோற்றில் விழுந்து புரண்டு தின்கிறார்கள், அதுவும் மதிய உணவைச் சாவடி அடித்துவிட்டு, சோற்றால் அடித்த பிண்டம் போல் மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்த மந்தநிலை விலகுவதற்கு மாலை ஐந்தரை மணி ஆகிவிடும், இதற்கிடையில் இரு முறைகள் டீ, டீயுடன் பிசுக்கோத்து, வெங்காய பக்கோடா, மிச்சர், உருளைக்கிழங்கு போண்டா என்று எந்நேரமும் கஃபேட்டேரியாக்கள் நிரம்பி வழிகின்றன. பித்தம் தெளிவதற்கும், மாலை ஆறடிப்பதற்கும் சரியாக இருக்கும். அவ்வளவுதான், பைக்கட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பிவிடுவது.   

பசி பற்றி எரியும்போது சோறு என்றால் ஒரு கவளம் கொள்ளும் பசி இருந்தால்கூடப்போதும்முப்பத்திரண்டு கவளங்கள்  கட்டுப்பாடு இல்லாமல் உள்ளே இறங்கிவிடும். ஒரு கவளம் உள்ளே இறங்கி, வயிறு மற்றும் ஜீரண உறுப்புக்கள் மூளைக்குத் தகவல் அனுப்பி, அது மீண்டும் போதும் என்று சிக்னல் அனுப்பும் முன் மொத்த 'ஹெவி ஈட்டிங்கும்' நடந்து முடிந்திருக்கும். அதுதான் ஆளை அடிப்பது போல் உறக்கம் வந்து வேலை நேரத்தில் சொக்கிச் சாமியாடுவதற்குக் காரணம். இது ஒரு பெரும் துரோகம் மற்றும் சுரண்டல். நாக்கின் பேராசை காரணமாக, வயிற்றுக்குள் இருக்கும் மற்ற சின்சியரான உறுப்புகளின் மீது தேவைக்கதிகமான வேலைப் பளுவைச் சுமத்துவதாக ஆகும் இத்துரோகம்.

தொலையட்டும், அதெல்லாம் பேய்த்தீனி தின்பவர்கள் பாடு, அவர்களுக்கு மாதம் பிறந்தால் சம்பளம் போடும் கம்பெனி பாடு. இனி வருவது, சீரியஸ் மேட்டர். பின்வரும் அனைவருக்கும் இது பொருந்தும்

1. உடலை அதிகம் வருத்தாத டெஸ்க் ஜாப் எனப்படும் நெடுநேரம் உட்கார்ந்துகொண்டு செய்யும் வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள்.  

2. எப்போதும் அதிக வேலைப்பளு மற்றும் அதீத அழுத்தத்துடன் வேலை செய்ய நேரிடுபவர்கள்

3. முப்பத்தைந்து மற்றும் அதற்கும் அதிக வயதுடையவர்கள், நாற்பது, ஐம்பது மற்றும் அறுபதுகளில் இருப்பவர்கள், அதிக கவனக்குவிதலுடன் செய்யவேண்டிய வேலைகளில் இருப்பவர்கள்

4. இவர்கள் தவிர, எந்த வயதினராக இருப்பவர்களாகவும் இருக்கட்டும்எந்த வேலை செய்பவராகவும் இருக்கட்டும்காலை முதல் மாலை வரை தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும் என்று நினைப்பவர்கள்

கடும் வயல் வேலை, தோட்ட வேலை, கல்லுடைக்கும், வண்டி ஓட்டும்/ இழுக்கும் மற்றும் பல உடலுழைப்பு சம்பந்தப்பட்ட வேலைகள் செய்பவர்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் எவ்வளவு உண்டாலும் உடல் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும், குளுக்கோஸாகவும் கலோரிகளாகவும் மாற்றி, செலவு செய்து தீர்த்துவிடும்.

சரி முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். காலை, மாலை, மதியம் என்று எப்போது தொப்பைக்குள் அரிசிச்சோறு இறங்கினாலும், அடுத்த அரைமணி நேரத்தில் தாலாட்டுப் பாடாமலேயே உறக்கம்/ மயக்கம் உறுதி. சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமானால், காலை மற்றும் மதியத்தில் சோற்றைத் தவிர்க்கவேண்டும். வயிற்றுக்கு 'அன்னமிட்டகை'ய்யோடு உறக்கம் வருவதற்கு முக்கியக்காரணம் அதிலுள்ள கார்போஹைட்ரேட் என்னும் சர்க்கரையின் வேறொரு வடிவம். கார்போஹைட்ரேட் வயிற்றுக்கு வந்தவுடன், கணையத்துக்குத் தகவல் தெரிந்துவிடும், அது முழு மூச்சாகச் செய்யப்பட்டு, இச்சர்க்கரையை ஸின்தஸைஸ் செய்வதற்குத் தேவையான இன்சுலினைச் சுரந்தே ஆக வேண்டும். அவ்வாறு சுரக்கும்போது இடைவிளைவுப்பொருளாக மெலட்டனின் என்னும் வேதிப்பொருளும் சுரக்கிறது. நம் உடலில் உள்ள சிர்கேடியன் கடிகாரம் இரவானால் தானாகச் சுரக்கும் வேதிப்பொருள்தான் இந்த மெலட்டனின். இதன் வேலையே உறக்கத்தை வரவழைப்பதுதான். அதனால்தான் காலை உணவில் பொங்கல் உண்டவுடன் ஆழ்நிலை தியானத்துக்குச் சென்றுவிடுகின்றோம். இட்டிலியிலும்தான் அரிசி இருக்கிறது, ஆனால் அதை உண்டால் மயக்கம் வருவதில்லையே, ஏன்? ஏனென்றால் பொங்கலில் உள்ள அரிசியின் அளவுக்கும், இட்டிலியில் உள்ள அளவுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. பொங்கலில் மாவுச்சத்து அதிகமுள்ள இன்னொரு பொருள் சேர்க்கப்படுகிறது, அதுதான் பாசிப்பருப்பு (ஹோட்டல் சாம்பாரில் பாசிப்பருப்பை ருசிக்காக மட்டுமல்ல அதிலுள்ள மாவுத்தன்மை காரணமாக அது சாம்பாருக்கு ஒரு அடர்த்தியைக் கொடுக்கும், அதற்காகவும் சேர்க்கிறார்கள்). இவையிரண்டும் சேர்ந்து டபுள் இம்பாக்ட் கொடுக்கும். தவிர இட்டிலியில் மாவு நொதிக்கவைக்கப்படுவதால், அதில் உள்ள எளிய சர்க்கரை ஒரு சிக்கலான சர்க்கரையாக மாறுகிறது, அதனால் உடலில் சர்க்கரை அளவு ஏறுவது ஓரளவு மட்டுப்படுகிறது, மந்தநிலை ஏற்படுவதும் குறைகிறது. அரிசிச்சோற்றின் க்ளைசெமிக் இண்டெக்ஸ் மிக மிக அதிகம். நூறு கிராம் அரிசியில் கிட்டத்தட்ட தொண்ணூறு கிராமும் கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரை. மீதி சக்கைஅதில் வேறு சத்துமானமே கிடையாது.

அரிசி என்றல்ல, மாவுச்சத்து நிறைவாக உள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் வயிற்றுக்குள் சென்ற சிறிது நேரத்துக்குள் வேலையை ஆரம்பித்துவிடும். உருளைக்கிழங்கு, தினை உட்பட எந்தச் சிறுதானிய உணவாக இருந்தாலும், ரொட்டி, சப்பாத்தி என்று கோதுமை உணவாக இருந்தாலும், இதேதான். அதில் உள்ள கிளைசெமிக் இண்டெக்ஸைப் பொறுத்து 'நண்பகல் நேரத்து மயக்க' இன்டெக்ஸும் மாறுபடும்

தினமும் ஒரு லோடு கற்களை உடைக்கும் ஒருவனுக்குத்தான் அவ்வளவு அரிசிச்சோறு தேவைப்படும். ஏனென்றால், அவர்கள் செலவழிக்கும் கலோரிகளை உடனைடியாக வழங்க அரிசி அல்லது தானிய உணவுகள் அவசியம் மற்றவர்களெல்லாம் அவ்வளவு சோற்றை உண்பதற்குத் தகுதியே அற்றவர்கள்அரிசியை தினமும் தின்பதால், நாற்பது வயதுக்குமேல் உடலுழைப்பு இல்லாத காரணத்தால், தின்ற அரிசியில் உள்ள மிகைக் கலோரிகள் வேறு எதற்கும் பயன்படாமல், முன்புறம் அரிசி மூட்டையை வைத்துக் கட்டியதைப்போல் தொப்பை தள்ளுகிறதுஆளே அரிசி மூட்டை போல் மாறிவிடுகிறார்கள்

சரி தேனீ மாதிரி சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும், தொப்பை விழக்கூடாது, நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? கீழ்க்காண்பவற்றைச் செய்யவேண்டும்

1. உணவு முறையை மாற்ற வேண்டும்நிறைய நுண்ணூட்டச்சத்துக்கள், புரதம், மற்றும் நல்ல கொழுப்பு ஆகியன மிகுந்த உணவை உண்ணவேண்டும்.

2. கொஞ்சமாவது புட்டத்தை அசைக்கவேண்டும், அதாவது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.

3. நன்கு உறங்க வேண்டும்.

இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.   

கீழ்க்காண்பது ஆற்றல் நிறைந்த பகலுணவுக்கான செய்முறை. இந்த உணவு முறையைத்தான், நான் சிலகாலமாகக் கடைபிடிக்கிறேன்.  

**நான்கைந்து காய்கறிகள் (உண்ணத்தகுந்த எந்தக் காய்கறியாக இருந்தாலும் தகும்), ப்ராக்கோலி, ஒருகைப்பிடி பசலைக்கீரை, காளான், கொஞ்சமே கொஞ்சம் இடித்துப் போடப்பட்ட பூண்டு போன்றவற்றை லேசாக வெண்ணையிலோ, ஆலிவ் எண்ணெயிலோ வதக்கிக்கொள்வது. பிறகு அதை இறக்கி ஒரு தட்டில் போட்டுவிட்டு, ஒரு குப்பல் சீஸ் துருவல் (Cheddar, Mozzarella, Parmesan என்று முந்நூற்றுக்கும் அதிகமான வகைகள் உள்ளன) தூவிக்கொவது, பிறகு ஆலிவ் காய்கள், அவகாடோ பழம், மிளகுத்தூள், கொஞ்சம் உப்பு. அசைவ உணவுக்காரர்கள்அவித்த/ சுட்ட மீன் துண்டு, அவித்த/ சுட்ட சிக்கன் துண்டு, அல்லது அவித்த முட்டைத்துண்டுகள் இரண்டோ நான்கோ டாப்பிங்காக சேர்த்துக்கொள்ளலாம். சைவர்கள், ஒரு கைப்பிடி அவித்த கொண்டைக்கடலை, டோஃபூ அல்லது பனீர் சேர்த்துக்கொள்ளலாம் (கவனம்  கொண்டக்கடலை அதிகம் சேர்த்தால்மீண்டும் மாவுச்சத்துமீண்டும் உறக்கம்) பசலைக்கீரைக்கு பதில் பொன்னாங்கண்ணிக்கீரை போட்டால், சுவை இன்னும் அள்ளும். கொத்துமல்லி கித்துமல்லி என்று எதை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சி துருவிப்போட்டாலும் பழுதே இல்லை. தயவு செய்து பெருங்காயத்தூள் மட்டும் வேண்டாம். Devils dung என்று பெயர் வைத்திருக்கிறான் இங்கிலீஷ்காரன் அதற்கு. இதற்கு அது ஒத்துவராது.

எல்லாமும் சேர்த்தே, மீறிப்போனால் வதக்கிய பிறகு இரு கைப்பிடி அளவு இருக்கலாம். மேற்கண்டது காய்கறி சாலட்டுக்கானது. வதக்கி சாலட் செய்யக்கூடாது என்றெல்லாம் சட்டமில்லை. வேண்டுமானால் 'ஸ்டிர்ஃப்ரை சாலட்' என்று பெயர் வைத்துக்கொள்ளலாம். போகப்போக இதற்குப் பழகிய பிறகு, கீரைகளை நன்கு பச்சையாகவே நறுக்கிப்போட்டு, அதன் மீது லேசாக எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம்

**ஒரு சிறு பழ சாலட் - நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள், பப்பாளித்ததுண்டுகள், சிறு கமலா ஆரஞ்சுச் சுளைகள், ப்ளூ பெரிநல்ல தரமான கருந்திராட்சை, ஸ்ட்ராபெரி, மாதுளம் முத்துக்கள், அதன் மேல் இரு தேக்கரண்டி தேன் மழை. ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட பழங்களை சுழற்சி முறையில் மாற்றிக்கொள்ளலாம். அவ்வளவுதான், இதை இரவிலேயே செய்து குளிர் பதனப் பெட்டியில் வைத்துவிட்டு காலையில் எடுத்துச்செல்லலாம். ஒன்றுமே ஆகாது. குளிர் பதனப் பெட்டியில் வைத்தாலெல்லாம் ஒன்றும் கெட்டுவிடாது. இது வெள்ளாவிச் சூட்டில் வெந்துபோன சத்தற்ற சக்கைகளான பிரியாணியைவிட, சால்னாவைவிட, புரோட்டாவைவிடக் கெடுதல் அல்ல

மேற்கண்ட உணவில் உள்ள சத்துக்களில் என்னென்ன அடங்கியிருக்கின்றன?

பைல் என்னும் பித்த நீர் சுரக்கத்தூண்டும் நல்ல கொழுப்பு, வைட்டமின்கள் , பி, சி, டி மற்றும் கே. பாலிஃபீனால்கள், ஃபிளேவனாய்டுகள், ஃப்ரூக்ட்டோஸ் என்னும்  அளவான, மூர்க்கமாக கணையத்தைத் தாக்கிப் பாடுபடுத்தாத சிக்கலான சர்க்கரை, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் சில கனிமச்சத்துக்கள். வயிற்றினுள் நல்லது செய்யும் பாக்டீரியாக்களையும் அவ்வப்போது செலுத்திக்கொள்ளவேண்டும். அதற்கு அதி சிறந்த வழி, சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு, அடுத்தநாள் சோற்றைப் பிழிந்து தூர எறிந்துவிட்டு, அதில் உள்ள நீரில் ஒரு க்ளாஸ் மோர் ஊற்றி உப்புப் போட்டுவைத்துவிட்டு நாள் முழுக்க எப்போது வேண்டுமானாலும் அருந்தலாம். படுக்கப்போகும் நேரம் தவிர. சளிப்புடிச்சுரும் குழிப்புடிச்சுரும் என்று எவன் சொன்னாலும் நம்பவேண்டாம். இதைத் தொடர்ந்து அருந்திக்கொண்டே வந்தால், ஜீரணசக்தியும் நோயெதிர்ப்பு சக்தியும் கூடிக்கொண்டே போகும். இதில் இன்னொரு அனுகூலம் உண்டு, அது என்னவென்றால், தீட்டப்படாத அரிசியின் உமியில் ஒட்டிக்கொண்டிருந்த ஒருசில நுண்ணூட்டச்சத்துக்களின் மிச்சம் மீதி, அரிசியின் மீதும் படிந்திருக்கும். அவைகளை பழைய சோற்றுப் ப்ராசஸ் அடித்துக்கொண்டு வெளிக்கொணர்ந்து ஊறவைத்திருந்த நீரில் கலக்க விடும். அத்தனை சத்துக்களையும் எடுத்து அருந்தத் தடையாக இருப்பது வெறும் சோம்பேரித்தனம் மட்டுமே. அல்லது பழைய சோற்றின் மீதான இளக்காரம். 

பழைய சோறா என்று முகம் கோணும் கார்ப்பரேட் () ஸாஃப்ட்வேர் ஆட்களுக்கு - சவர்க்ர்ரெளட் என்று ஒன்று உண்டு, சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். அது வேறு ஒன்றுமில்லை, கேரட் அல்லது முட்டைகோஸை செதில் செதிலாக வெட்டி அறிந்து வெறும் உப்பு மட்டும் போட்டு ஒரு வாரம் ஊற வைத்த ஊறுகாய். அதில் உள்ள நுண்கிருமிகள் அற்புதங்கள் பல நிகழ்த்தும்.     

இவற்றில் உள்ள பத்தில் ஒரு பங்கு மயிர்ச்சத்தும் பிரியாணி புரோட்டாவிலோ, புளிக்குழம்பு, ரசம், சாம்பார், சோறு, கறி, காய் கூட்டிலோ கிடைக்காது. தமிழ்நாட்டில் இன்னொரு வியாதி இருக்கிறது, அது என்னவென்றால், எந்நேரமும் சோற்றைப்பற்றிப் பேசும்போது பாட்டி வைத்தியம் சொல்லிக்கொண்டே இருப்பது. இதைப்பற்றித் தெளிவாக கீழ்க்காணும் இணைப்பில் எழுதியிருக்கிறேன்.               

https://prasannavenkatesans.mainpage.co.in/2022/02/cookery-mockery.html

ஆரம்பத்தில் தயாரிப்பு நேரம் அதிகமாக எடுக்கலாம், போகப்போகப் பழகி விடும்

நான்கு பேர் சோற்று மூட்டையை அவிழ்க்கும்போதோ, கண் முன்னே மற்றவன் மட்டன் பிரியாணியையோ, காரக்குழம்பையோ மண்டுவதைப் பார்த்துவிட்டு, மண்டைக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டு நாக்கில் சலவா ஊற்றும். அப்போதெல்லாம் நாள் முழுதும் சுறுசுறுப்பாகத் தேனீ மாதிரி இயங்க வேண்டுமா வேண்டாமா? ட்யூராஸெல் போடப்பட்ட ரிமோட் கார் மாதிரி எக்ஸ்ட்ரா மைல் ஓடவேண்டுமா வேண்டாமா என்றெல்லாம்  நீங்களே கேட்டுக்கொண்டு மனதை அடக்கப் பழகிக் கொள்ளவேண்டும். அதே போல் ஆரம்பத்தில் நன்கு மென்று உண்பதற்கு சிரமமாக இருக்கும், ஆனால் சுவைக்கு நான் உத்தரவாதம்

ரொம்ப வெறியாக இருந்தால், இந்த உணவு முறையை மேற்கொள்ளும்போது சைடில் இஞ்சி பூண்டு ஊறுகாயையோ, எலுமிச்சை ஊறுகாயையோ நடுவிரலால் தொட்டு நாக்கில் இழுக்கிக்கொள்ளவும். அவரவர் வசதிக்கேற்ப ஆட்காட்டி விரலாலோ, கட்டை விரலாலோ அல்லது சுண்டு விரலாலோ கூட தொட்டு நக்கிக்கொள்ளவும். மானஸ்தனாக இருந்தால், நல்ல உணவு உண்ணும்போது ஊறுகாயை மனதால் கூட நினைக்கவே  மாட்டான்.

இம்முறையில் உணவு உண்டால், வெந்ததைத் தின்று தின்று செத்துப்போன சுவை மொட்டுக்கள் ஒரே மாதத்தில் உயிர்பெறும். இதிலுள்ள சத்துக்கள் காரணமாக மொத்த உடலுமே ஆயிரம் வாட் சார்ஜ் ஏற்றப்பட்டது போல் பொலிவாக இருக்கும். உள்ளுக்குள் இருந்த நாட்பட்ட நோய்கள் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும். கவனச்சிதறல் இல்லாமல் வேலை செய்ய முடியும். கோபம், எரிச்சல், படபடப்பு குறைந்து நிதானம் கூடும்

இவை தவிர, கால்சியம், வைட்டமின் டி, மீன் குளிகைகள், அஸ்வகந்தா போன்ற சப்ளிமென்டுகளும் அவரவர் தேவைக்கேற்ப அவசியம்

நாற்பதுக்கு மேல்  மதிய மந்தநிலை அடித்து, அடித்து, மன அழுத்தமும் சேர்ந்துகொண்டு சிர்கேடியன் பாதிக்கப்பட்டு, இரவில் உறங்கும் நேரத்தில் கையில் ஃபோன் பிடிக்கும் பழக்கமும்  (ஃபோன் தான்!) சேர்ந்துகொண்டு தூக்கத்தில் மண் அள்ளிப்போட்டுவிடும். அதனால் காலை வேலைகளிலும் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவை உண்டு, இரவில் மட்டும் அரிசிசோற்றையோ, வேறு சில தானிய வகைகளையோ உண்டால், எப்போது தேவையோ அப்போது மெலட்டனின் சுரந்து உறக்கமும் நன்கு வரும்

இது தவிர வாரத்தில் குறைந்த பட்சம் இரு நாட்களாவது, நீச்சல், சைக்கிள், கராத்தே, டென்னிஸ் அல்லது ஜிம் என்று ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். முடியாதவர்கள் யூட்யூப் பார்த்து யோகா கற்றுக்கொண்டு பத்துக்குப் பத்து அறையிலேயே செய்யலாம்.

இதற்கும் மேல் போனால், அறிவியல் கலந்த சுயமுன்னேற்ற வாழ்வியல் கட்டுரையாகப் போய்விடும். ஆகையினால் இத்தோடு முற்றுப்புள்ளி

இவ்வளவு எழுதிவிட்டு கில்மா வாழ்க்கைக்கு இது எப்படி உதவும் என்று எழுதாமல் இருப்பதற்கு நான் 'அந்த' எழுத்தாளன் அல்ல என்பது காரணம் அல்ல. நானொரு 'பழ' எழுத்தாளன் என்பதும் காரணமல்ல. என்னால் மீனைக் கையில் பிடிப்பதற்கு மட்டுமே சொல்லித்தர முடியும், அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றெல்லாம் கையைப் பிடித்து சொல்லித்தந்துகொண்டிருக்கமுடியாது என்பதுதான் காரணம். அதாவது மீனைச் சமைத்து வாயில் ஊட்டி விடுவது என் வேலை கிடையாது, அதைப் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது மட்டுமே என் வேலை. மீண்டும் மீண்டும் மீன், கையில் பிடிப்பது என்று அசிங்கமாக இரட்டை அர்த்தமாக வருகிறது. நேரடியாகச் சொல்லிவிடுகிறேனே, அவனவன் குச்சி பாடு அவனவன் வாழ்க்கைப் பாடு, நமக்கென்ன அதுபற்றி?

Comments

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15