Posts

கிரிக்கெட் என்னும் பொறுக்கிகளின் விளையாட்டு

நா ற்பது மற்றும் ஐம்பதுகளில் வினூ மன்கட், விஜய் ஹஜ்ஸாரே, அறுபதுகளில் வெங்கட்ராகவன், சந்திரசேகர் பிறகு எழுபதுகளில் கவாஸ்கர், குண்டப்பா; என்றெல்லாம் பழம் புராணக்கதைகள் கேட்டும், லேசாக விவரம் தெரிய ஆரம்பித்ததும் எண்பதுகளில் கபில்தேவ், அஜ்ஸாருதீன், சாஸ்திரி, ஸ்ரீகாந்த், மஞ்ரேக்கர். தொன்னூறுகளில் சச்சின், திராவிட், பிறகு ஷேவாக், யுவராஜ், தோனி, ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி என்று கால ஓட்டத்தில் மாறிக்கொண்டே செல்லும் கிரிக்கெட்டன்களை நினைவுகூரும்போது மட்டையான்கள் பற்றித்தான் எப்போதும் நினைவு வருகிறது. கபில்தேவ் என்னும் பந்தோனைத் தவிர வேறு எந்தப் பந்தாண்டியும் நினைவுக்கு வருவதில்லை. காரணம் இந்தியப் பந்தாண்டி எவனும் அனல் பறக்கும் பந்து வீச்சை வீசியதில்லை. பெயர் வாங்கிய அனைவரும் சுழல் அல்லது மாங்காய் உருட்டுதான். எரப்பள்ளி  ப்ரஸன்னா, ரோஜர் பின்னி போன்றோர்கள் பெயரெல்லாம் இவ்விஷயத்தில் அடிபடும். கொஞ்சம் கொஞ்சமாக விவரம் தெரிந்து கையில் பிடித்து மட்டையை ஆடப் பழகியபோது, வெங்சர்க்கார், கிர்மானி, சேத்தன் ஷர்மாவெல்லாம் வீட்டுக்கு அனுப்பப்பட்டு, புதிய தலைமுறை கட்டை மாயாவிகளான மஞ்சுரேக்கர், ரவி ஸாஸ்த்ரி...

அ.பு வின் தொடக்கம்

  கொ ரோனா கடுப்பும் கோபமும் இன்னும் தாளாமல் கெட்ட வார்த்தை மாதிரி "அ. பு" என்று தலைப்பு வைத்திருக்கிறேன் என்று நினைக்கலாம். முகாந்திரமும் இல்லாமல் இல்லை. டிசம்பர் 7 அன்று கொடுத்த சாம்பிள் இன்னமும் PCR டெஸ்ட் செய்யப்படவில்லை. இன்றோடு ஒரு  வாரம் ஆகிறது ஆன்லைனில் "Test Result not available yet" என்று வருகிறது.  அது தொலையட்டும். சரியாக ஒரு வாரம் முன்பு நான் இழந்த வாசனை மற்றும் சுவை உணர்வு இன்னும் திரும்பிய பாடில்லை. அப்போது தோன்றிய ஒன்றுதான் கீழ்க்காணும் அ.பு, அதாவது அறிவியல் புனைவு! (கீழ்க்காணும் லிங்கில் க்ளிக் செய்து படித்து இன்புறுக / திட்டுக) அ.பு - க்வாண்டமும் மெய்யியலும் #1 -ப்ரஸன்னா

மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் ஐந்து)

இ ந்த மூடிக்குடியே கூட மணங்களைப் பகுத்தறியவியலா கோதையின்  நுகர்சிப்  புலன் சார்ந்த ஒரு குறைபாடு காரணமாகத்தான்  சாத்தியப்படுகிறது. வயிற்றினுள் மெதுவான வன்கோரத்துடன் விரவிப்பரவுகின்ற கச்சைச் சாராயம் விருவிருவென உட்கிரகிக்கப்பட்டு குருதியில் கலந்து நாசிவழியே கசிந்து நாறிக்கொண்டிருந்தாலும் வீட்டிற்குள் சத்தமில்லாமல் போய்ப்  புழங்க முடிகிறது. சில மூடிகள் அதிகமானால் அதற்கும் வினை.  வீட்டில் குடிக்கத்தொடங்கியவனை சில முறை எச்சரித்தும் கேட்கவில்லை. உனக்கு என்னடி தெரியும் ஆபீசுல எவ்ளோ ப்ரச்சன தெரியுமா? சரக்கடிச்சா எவ்ளோ ரிலாக்சா இருக்கு தெரியுமா? என்றுவிட்டு நடு நடுவில் எமொஷனல் ரொமான்ஸ் கொடுத்தான். அது அவளுக்குப் புரியவே இல்லை.  ஆனால் அதில் ஒருவித  ஒருவித கிக் இருந்தது. அட இது புது மாதிரி இருக்கிறதே என்று முதலில் ரசித்தவள், இவன் ரொம்ப ஓவராகப்போகவே, ஊரில்  உள்ள  சில அக்காள்களிடம் போன் செய்து கேட்டிருக்கிறாள். அவர்களே குடி கிராஜுவேட் ஆகிப் பலவருடங்கள் ஆகின்றன. குடல் கறியுடன் ஊறுகாய் நக்கிகொண்டே ஒன்றரை குவாட்டர் அடித்துவிட்டுப் புருஷனுடன் ஜாலி ப...